திங்கள், 9 ஜனவரி, 2017

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: பிரதமருக்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

பணமதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக ரிசர்வ்வங்கி ஆளுநர் அளிக்கும் பதில் திருப்தி அளிக்கவில்லை எனில், பிரதமரிடம் விளக்கம் கேட்க நாடாளுமன்ற பொதுகணக்கு குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற குழு முன் வரும் 20ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தாமஸ் தலைமையிலான பொதுகணக்குக் குழு அனுப்பிய கேள்விகளுக்கு ஆர்பிஐ தரப்பில் இருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆர்பிஐ அளிக்கும் பதில்கள் தொடர்பாக 20ம் தேதி நடக்கும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார். ஆர்பிஐ அளிக்கும் விளக்கத்தில் திருப்தி இல்லை என்றால் பிரதமர் மோடியை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தாமஸ் தெரிவித்தார்.

Related Posts:

  • Astaghfirullah ... Astaghfirullah ... Astaghfirullah ..... AstaghfirullahHumanity can steep so low – Never Imagined itBrazilian Man Got a Dog Face by Plastic SurgeryA … Read More
  • சாலை விபத்தில் புதுக்கோட்டை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து மோதி்யதால் மினிவேனில் சென்ற பள்ளி மாணவர்கள் 8 பேர் மற்றும் ஒட்டுனர் உள்பட 9 பேர… Read More
  • பள்ளி புறக்கணிப்பு முபட்டி 19.06.2013- குழந்தை ஏசு மெட்ரிக் பள்ளி - அன்னவாசல்   -80% முபட்டி மாணவர்கள் எவரும் பள்ளி செல்லவில்லை. கட்டண உயர்வை கண்டித்து அணைத்து மா… Read More
  • நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் அரசியல்வாதிகளின் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் இருவகைகளில் உள்ளன.ஒன்று அரசியல்வாதிகளுக்காக லட்டர்பேட் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் நிகழ்ச்சிஇரண்டாவது … Read More
  • மோடியின் பொய் பிரச்சாரங்களை நாட்டிற்கு எல்லா மதங்களையும் அனுசரித்து வழிநடத்தகூடிய பிரதமர்தேவை.ஒரு மதத்தவரை ஏற்றியும் மற்றமதத்தவரை தூற்றியும் இங்கு யாராலும் ஆட்சிசெய்துவிடமுடியாத… Read More