திங்கள், 30 ஜனவரி, 2017

குடிசைக்கு தீ வைத்த பெண் போலிஸ் யாரென தெரிந்தது …! நடவடிக்கை எடுக்கப்படுமா ?


குடிசைக்கு  தீ வைத்த பெண்  போலிஸ் அடையாளம்…!    நடவடிக்கை  எடுக்கப்படுமா…….
ஜல்லிக்கட்டுகாக , ஒட்டுமொத்த  தமிழகமே  போராடி  வெற்றி பெற்றது.ஆனால்,  போராட்டத்தின்  முடிவில்,  கலவரம்  வெடித்தது.  போலீசாருக்கும்,  இளைஞர்களுக்கும் இடையே  கலவரம் வெடித்தது.
இந்நிலையில், கலவரத்தின் போது, போலிசாரே  ஆட்டோவிற்கு தீ  வைப்பதும், குடிசைக்கு தீ  வைக்கும் காட்சியும்  வீடியோவாக வைரலாக சமூக வலைத்தளத்தில் பரவியது.
மெரினாவில்  ஆட்டோவிற்கு  தீ :
ஜல்லிக்கட்டுகாக  அவசர சட்டம்  இயற்றப்பட்டு  மாநில  அரசு  அறிவித்த  பின்பும்,  நிரந்தர தீர்வு தான்  வேண்டும் என  போராட்டம்  தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி காவல்துறையினர், இந்த போராட்டத்தை  கலைக்க முயன்றனர்.இதில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினருக்கும்,சமூக விரோதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
குடிசைக்கும்  தீ :
இந்நிலையில் சென்னை நடுக்குப்பம் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவுக்கு,  தீ வைத்த பெண் போலிஸ் ஒருவர், அருகிலிருந்த குடிசை வீட்டிற்கும் தீ வைக்கும் ஆண் போலிசும்  உள்ள காட்சிகள் அனைவராலும்  சமூக வலைத்தளங்களிலும், டிவிக்களிலும்  பார்க்க முடிந்தது.