ஞாயிறு, 29 ஜனவரி, 2017

இந்து மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் - இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை....!!

இந்து மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் - இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை....!!
தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் ப்ரண்ட், கேம்பஸ் ப்ரண்ட், இந்திய தேசியலீக் கட்சி, மே 17 போன்ற இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்றும் சீமான், அமீர், கெளதமன், சுப.உதயக்குமார், தடா ரஹீம் போன்றவர்களை கைது செய்ய வேண்டும். என்றும் நாட்டை பிரிக்க வேண்டும் என்று யாரேனும் சொன்னால் நாக்கை அறுப்போம் என்றும் இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் இராம.ரவிக்குமார் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்து மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் மு.நாச்சியப்பன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவருடைய புகார் கடிதத்தில்...
இந்து மக்களுக்கு எதிராகவும், இந்திய மக்களுக்கு எதிராகவும் இந்து மக்கள் கட்சி தொடர்ந்து பேசி வருவதாகவும், ஜாதி மத சண்டைகளை உருவாக்கி வருவதாகவும், ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழர்களை பயங்கரவாதிகள் என கூறிவரும் அர்ஜூன் சம்பத், இராம.ரவிக்குமார் ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், இந்து மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No automatic alt text available.