சனி, 28 ஜனவரி, 2017

ஏன்டா இந்த மானங்கெட்ட புலப்பு

மிழகத்தில் நடைபெற்ற வரலாறு போற்றும் ஜல்லிக்கட்டுக்காக கூடி தமிழகத்தின் அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும் களம் கண்டு வெற்றியும் கண்டுள்ளனர் இன்றைய இளைஞர்கள்.
இறுதியில் தங்களுடைய பாணியில் ஆட்களை இறக்கி கலவரத்தை உண்டாக்கி தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக மாணவர்களை நக்சல்கள் என்றும், தீவிரவாதிகள் என்றும் அரசை வைத்தே சொல்ல வைத்துவிட்டன பாசிச கும்பல்.
Image may contain: 2 people
வெற்றியையும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையையும் சகித்துக்கொள்ள இயலாத காவி வெறியும், பாசிச வெறியும் கொண்ட பாஜக,Rss தலைவர்கள் தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டு மதவாத பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இஸ்லாமியர்களான நாங்கள் பாடம் புகட்டும் வேலையை எங்களுக்கு தராமல் அந்த வேலையை எங்கள் தொப்புல்கொடி உறவுகளே செய்து விட்டனர்.
பாசிச சக்திகளின் ஒவ்வொரு சூழ்ச்சியும் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு மேலும் வலுசேர்க்கவே செய்கிறது.
உங்களது பருப்பு தமிழகத்தில் வேகாது. பாஜக சார்பில் தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வான இறுதி நபர் பொன்னாராகவே இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
இஸ்லாமியர்கள் ஐவேலை தொழக்கூடியவர்கள். நபிகள் நாயகத்தை பின்பற்ற கூடியவர்கள்.
அங்கு தமிழின உணர்வோடு போராத்தில் களந்து கொண்டோம். இறைகட்டளை ஏற்று தொழைகையிலும் ஈடுபட்டோம். இது மதச்சார்பற்ற நாடு.
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை கண்டு புத்தி பேதலித்து அறிக்கை வெளியிடுபவர்கள் விரைவில் சென்னை கீழ்பாக்கம் சென்று பரிசோதித்து கொள்ளவும்.
இந்து-முஸ்லிம் வேற்றுமையை உண்டாக்க இது குஜராத் அல்ல...
தமிழகம் என்பதை ஞாபகப்படுத்துகிறோம் அயோக்கியர்களுக்கு.
SOURCE: - TNM media News