ஞாயிறு, 29 ஜனவரி, 2017

15 வருடங்களுக்கு பின் சென்னையில் அரசு அனுமதியுடன் Rss பேரணி..!

15 வருடங்களுக்கு பின் சென்னையில் அரசு அனுமதியுடன் Rss பேரணி..!
கடந்த வருடம் அனுமதி கேட்கப்பட்டு அன்றைய ஜெயலலிதா ஆட்சியால் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி சிலர் பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணி நடத்தியவர்களை காவல்துறை கைது செய்து வழக்குப்பதிவு செய்தது.
ஆனால் இன்று அரசும், காவல்துறையும் அனுமதி அளித்தே இந்த பேரணி நடைபெறுகிறது.
மறைந்த ஜெயலலிதாவால் தொடர்ந்து எதிர்க்கப்பட்ட அனைத்து கோப்புகளும், அனைத்து திட்டங்களும் தற்போதைய பன்னீர் செல்வத்தின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன புதியகல்வி கொள்கை, உதய் மின்திட்டம் உட்பட.
இந்த RSS பேரணியை 15 வருடங்களாக தடைசெய்யப்பட்டது பாதுகாப்பு கருதியே.
ஏற்கனவே இந்த RSS இயக்கம் இந்தியாவில் நான்கு முறை தடைசெய்யப்பட்ட இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியல்ல. பாஜகவின் பினாமி ஆட்சி என்பது மணிக்கொருமுறை நிருபணம் ஆகி வருகிறது.