திங்கள், 30 ஜனவரி, 2017

அரைமணி நேரத்தில் சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ மருந்து

சளி பிடித்துவிட்டால் சிலர் என்னதான் வைத்தியங்களை மேற்கொண்டாலும், 2 அல்லது 3 நாட்களுக்கு பின்னரே அதற்கான தீர்வு கிடைக்கும்.
அப்படி அரைமணிநேரத்தில் உங்கள் உடலில் இருந்து சளியை விரட்ட இதோ தீர்வு,
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.
நீங்கள் உறங்கிய அரை மணி நேரத்திற்கு பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும். பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.