
The problem with the hijab ruling: மனித சமூகத்தின் மையமாக மதம் பலநெடுங்காலமாகவே இருந்து வருகிறது. நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் அது இருக்கிறது. பிப்ரவரி 5ம் தேதி கர்நாடக மாநிலம் வெளியிட்ட சுற்றறிக்கையை உறுதிப்படுத்தி, கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் தொடர்பான தீர்ப்பை வழங்கியது. ஹிஜாப் எப்படி இஸ்லாம் மதத்தின் அத்தியாவசிய பழக்கம் இல்லை என்பது குறித்து தலைமை நீதிபதி ஒரு மதத்தின் அத்தியாவசிய நம்பிக்கைகள், நடைமுறைகள் மீது நீண்ட விவாதம் நடத்த, இறுதியில் மனுதாரர்களின் வாதங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்ற முடிவுக்கு வந்தது இந்த அமர்வு. தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான மூன்று பேர் கொண்ட முழு அமர்வு 129 பக்க தீர்ப்பை வெளியிட்டது.