புதன், 19 அக்டோபர், 2022

ஜெயலலிதா மரணம்; திருக்குறளில் விளக்கமளித்த நீதியரசர்

 18 10 2022

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையின் இறுதியில் இடம் பெற்றிருக்கும் திருக்குறள் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தியது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கையை நீதியரசர் ஆறுமுகசாமி, கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார்.

இந்த அறிக்கையில் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருப்பதாகவும், எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் கூறியிருந்தார். அதன்தொடர்ச்சியாக சட்டப்பேரவை இன்று கூடியதும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையின் நிறைவாக இடம் பெற்ற திருக்குறள் ஒன்று அனைவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதில்,

“காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.”

என்ற அதிகாரம் 50ல் இடனறிதல் என்ற தலைப்பில் இடம்பெறும் 500வது திருக்குறளை குறிப்பிட்டு தமது அறிக்கையை நிறைவு செய்திருக்கிறார் நீதியரசர் ஆறுமுகசாமி. அந்த திருக்குறளுக்கான மு.வரதராசரின் விளக்கத்தையும் நீதியரசரே பதிவு செய்துள்ளார்.

“வேல் ஏந்திய வீரரை கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்” என்று திருக்குறள் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருக்குறள் தான் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

source https://news7tamil.live/death-of-jayalalithaa-justice-who-explained-in-thirukkural.html

Related Posts:

  • சாதியை தரைமட்டமாக்கும் இஸ்லாம் - ‪#‎இந்து‬, கிறித்தவ சகோதரர்களுக்கு ஓர் இனிய ‪#‎அழைப்பு‬! கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தி ஹிந்து நாளிதழில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்கள… Read More
  • தொழுகையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கடமையான) தொழுகையை முடித்ததும், மூன்று முறை ‘அஸ்தஃக்ஃபிருல்லாஹ்‘ (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று … Read More
  • Nice New Year 2014 இதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா ? கீழ்காணும் பெண் செத்துப்போகல சனியனுக்கு போதை சமீபத்தில் ஒரு குடிமகள் சைதாப்பேட்டையில் குடித்த… Read More
  • ‎குஜராத்‬ கலவரத்திற்காக வேதனைப் 2002 ஆம் ஆண்டு நடந்த ‪#‎குஜராத்‬ கலவரத்திற்காக வேதனைப்படுவதாக மகா நடிகன் ‪#‎மோடி‬ 11 ஆண்டுகள் கழித்து வேதனை தெரிவித்துள்ளார்.கோத்ராவில் ரயிலை எரித்து… Read More
  • ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம் அல்லாஹ்வின் திருப்பெயரால்… ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்  முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும். … Read More