சனி, 26 நவம்பர், 2022

5ல் ஒரு பங்கு வேட்பாளர்களுக்கு குற்றவழக்குகளில் தொடர்பு

 

குஜராத் முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 167 பேருக்கு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் ஆம்ஆத்மி முதலிடத்தில் உள்ளது.

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளில் வரும் 1ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 788 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். அந்த வேட்பாளர்களில் சுமார் 5ல் ஒரு பங்கினர் அதாவது 167 பேர் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் இது 21 சதவீதம் ஆகும். இந்த 167 பேரில் சுமார் 100 பேர் தீவிரமான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.

குற்றவழக்குகளில் தொடர்புடைய வேட்பாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி முதலிடத்தில் உள்ளது.  அந்த கட்சி நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் 32 பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும், அவர்களில் பலர் கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கொடூர குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.  குற்றவழக்குகளில் தொடர்புடைய வேட்பாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் உள்ளது.

காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் 35 சதவீதம் பேர் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர்களில் 14 பேர்  குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.

25 11 2022 

source https://news7tamil.live/candidates-link-with-criminal-cases-in-gujrat-election.html

Related Posts:

  • SHOW OUR HUMANITY பில் வாகன ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள்( ஜி.கோவிந்தராஜ்) மற்றும் சிலர்,பீச்சுக்கு வருகை தரும் வடமாநில வாலிபர்கள், காதலர்கள்,அனைவரையும் மிரட்ட… Read More
  • சுடுதண்ணீரில் குளித்தால் ஆண்மை பாதிக்குமா? பல்வேறு காரணங்களினால் ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிப்பிற்குள்ளாகிறது. பெண்களுக்கும் கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலோனோர் … Read More
  • டில்லியில் விமானம் வெடித்தது டில்லி அடுத்த துவாரகா பகுதியில், எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான சிறியரக விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அதில் பயணம் செய்த 10 பேர் பலியாக… Read More
  • முஸ்லிம் அமைப்புகளால் ஒன்றும் புடுங்க முடியாது.,,, தவ்ஹீத் ஜமாஅத், த .மு .மு .க போன்ற முஸ்லிம் அமைப்புகளால் ஒன்றும் புடுங்க முடியாது.,,, இந்து முன்னனி கட்சியின் தீவிரவாத வன்முறை பேச்சு ....... போலீ… Read More
  • நம்பிக்கை இழந்துவிட்டோம்.....!!! நம்பிக்கை இழந்துவிட்டோம்.....!!! தமிழக அரசே....!! காவல் துறை மேலிடமே....!!! இஸ்லாமியர்களின் உயிர்கள் என்ன கில்லுக் கீரையா........ திட்டம் தீட்ட… Read More