புதன், 30 நவம்பர், 2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது. கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோவை மாநகர் மாவட்ட தலைவர் அஜ்மல் அவர்கள் தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் நூற்றிற்கும் மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர் குனியமுத்தூர் காவல் உதவி ஆணையர் ரகுபதிராஜா கலந்து கொண்டார். மேலும் கடந்த 18வருடங்களாக மாநில முழுவதும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட்டுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொடுத்துள்ளது இருப்பிடத்தக்கது. இம்முகாமில் மாவட்ட செயலாளர் சைபுதீன், மாவட்ட பொருளாளர் இப்ராகிம், ஜமால்முகம்மது, மாவட்ட துணைச் செயலாளர் ஆசிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். https://youtu.be/7fqsRZN6AYU