வெள்ளி, 29 செப்டம்பர், 2023

வறண்டது மேட்டூர் அணை! கலக்கத்தில் டெல்டா விவசாயிகள்!

 

மேட்டூர் அணை வறண்டதால் அணைப்பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ ஆலய கோபுரம் வெளியே தெரிகிறது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37 அடி அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் குறையும் பொழுது அங்கு உள்ள புராதன சின்னங்கள் வெளியே தெரிவது வழக்கம்.

தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 37 அடி அடி மட்டுமே உள்ளதால், இந்தப் புராதன சின்னங்கள் முழுமையாக வெளியே தெரிகிறது. இதன்படி ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலையும் கோபுரமும் வெளியே தெரிகின்றன. அதேபோல கிறிஸ்தவ ஆலய கோபுரமும் தற்போது வெளியே தெரிகிறது.

இதே நிலை தொடர்ந்தால் நீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவதோடு, விளைநிலங்கள் தரிசாகும் நிலைக்கு தள்ளப்படும் என டெல்டா பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கான நீரை உடனடியாக பெற மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



source https://news7tamil.live/mettur-dam-is-dry-delta-farmers-in-turmoil.html

Related Posts:

  • தாயத் மக்கா ஹரம்ஷரீப்பிள் உள்ள இமாம் ஒருவர் தாயத்து கட்டிவந்த ஒரு நபருக்கு தாவா செய்து தாயத்தை கலற்றினார் அல்ஹம்துலில்லாஹ். நபி(ஸல்) அவர்… Read More
  • பாகற்காயை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! என்ன வென்று பார்ப்போமா!!! சுவாச கோளாறுகள்.பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்தும… Read More
  • சிடி ஸ்கானர் மூலம் பார்த்தபோது, ஒரு புத்தத் துறவி கையில் நச்சென்று ஆணியடித்தது போல ஒரு தகவல் சொல்கிறேன் கேளுங்கள். 1100 வருடங்கள் பழமையான புத்தர் சிலையொன்றைப் பரிசோதனைக்காக ஹாலந்து ந… Read More
  • கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து Saravanakumar Velusamy‪#‎அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி‬-பகிர்ந்து தடுப்போம் முடிந்தால் விழிப்புணர்வு கொடுப்போம்இந்தியர்களின் உயிரை ப… Read More
  • Quran உங்கள் இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாகி விடுவார்கள். எனினும், மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று… Read More