வியாழன், 28 செப்டம்பர், 2023

பென்னு சிறுகோளில் சேகரிக்கப்பட்ட கல், மண் மாதிரி: நாசா சாதனை!

 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பூமியிலிருந்து சுமாா் 200 கோடி கி.மீ. தொலைவில் உள்ள ‘பென்னு எனப்படும் சிறுகோளில் இருந்து கல் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து வெற்றிகரமாக பூமிக்கு கொண்டு சாதனை படைத்துள்ளது.

சூரிய குடும்பத்தில் 1.31 லட்சம் சிறுகோள்கள் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிறுகோள்கள் பூமியின் மீது மோதக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில் அடுத்த 300 ஆண்டுகளில் பூமியின் மீது பென்னு சிறுகோள் மோதக்கூடிய வாய்ப்பு அதிக அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பென்னு சிறுகோளை ஆய்வு செய்தால் சூரிய குடும்பத்தின் தோற்றம், கோள்களின் தோற்றம், பூமியில் உயிா்கள் வாழ்வதற்கு வழிவகுத்த உயிரினங்கள் மற்றும் தண்ணீரின் தோற்றம் குறித்து அரிய அறிவியல் உண்மைகள் தெரியவரலாம் என்பதால் பென்னு சிறுகோளிலிருந்து கல் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரிக்க நாசா முடிவு செய்தது.

இதனைடுத்து, ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் 2016, செப். 8-ஆம் தேதி பென்னுவை நோக்கி அனுப்பப்பட்டது.2020, அக். 20-ஆம் தேதி சிறுகோளின் தரைப்பரப்பிலிருந்து கல் மற்றும் மண் மாதிரிகளை ஒரு கொள்கலனில் விண்கலம் சேகரித்தது.

பின்னர் பூமியை நோக்கி ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலத்தின் பயணம் 2021, மே 10-இல் தொடங்கியது. அங்கிருந்து பூமியின் வளிமண்டலத்தை நோக்கி மணிக்கு 44,500 கி.மீ. வேகத்தில் விரைந்து வந்தது கொள்கலன்.

பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த 13-ஆவது நிமிஷத்தில் அமெரிக்காவின் உட்டா மாகாண பாலைவனப் பகுதியில் தரையிறங்கியது. அங்கிருந்து தற்காலிக ஆய்வறைக்கு கல் மற்றும் மண் மாதிரிகள் அடங்கிய கொள்கலனை நாசா விஞ்ஞானிகள் கொண்டுசென்றனா. பின்னா, ஹெலிகாப்டா் மூலம் அந்தக் கொள்கலன் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

source https://news7tamil.live/rock-soil-samples-collected-on-asteroid-bennu-nasa-feat.html