செவ்வாய், 23 ஜூலை, 2024

லோக்சபாவில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி: கல்வி அமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

 22 7 24

Rahul Gandhi 1

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசினார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில், காங்கிரஸ் எம்.பி., மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடும் முன்பே, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, யு.ஜி.சி வினாத்தாள் கசிவு முறைகேடுகள் குறித்து விவாதிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். நீட் தேர்வு  மற்றும் யு.ஜி.சி நெட் தேர்வை (UGC-NET) நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) நடத்துகிறது.

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது அறிவிப்பில்,  “நீட்-யுஜி மற்றும் யு.ஜி.சி நெட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வினாத்தாள் கசிவுகள் மற்றும் தேசிய தேர்வு முகமையின் (என்.டி.ஏ) தோல்வி குறித்து விவாதிக்க அன்றைய அனைத்து பட்டியலிடப்பட்ட பணிகளை இடைநிறுத்துமாறு சபையை வலியுறுத்தினார்.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா கடந்த அமர்வில் பல ஒத்திவைப்புகளைக் கண்டது. இது 18-வது மக்களவைக்கான முதல் அமர்வாகவும் இருந்தது, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் நீட் தேர்வு மற்றும் யு.ஜி.இ நெட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அழுத்தம் கொடுத்தன.

மக்களவையில் கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சிகள், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பேசினர்.

இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்துவிட்டு பொறுப்பேற்பாரா என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியில் தொடர்ந்தால், முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்காது என அகிலேஷ் யாதவ் கூறினார்.

“பணக்காரன், பணம் இருந்தால் கல்வி முறையை வாங்கலாம். அந்த உண்ர்வுதான் நாட்டில் இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் அப்படி அப்படியே உணர்கிறது” என்று ராகுல் காந்தி இப்போது சிஸ்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கேள்வி எழுப்பினார்.



“நீட் தேர்வு நடந்த 4,700 மையங்களில், பாட்னா பிராந்தியத்தில் பீகாரில் ஒரு மையம் மட்டுமே சிக்கலை எதிர்கொண்டது. இது பீகார் காவல்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது.



தர்மேந்திர பிரதான் காங்கிரஸ் அரசாங்கத்தின் "டிராக் ரெக்கார்டு"களையும் அடித்தார். மையப்படுத்தப்பட்ட தேர்வின் பின்னணியையும் அவர் வழங்கினார்.

மக்களவையில் கேள்வி நேரத்தில், நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைத் தாக்கி சில கடினமான கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ்,  “நான் இங்கு அரசியலை கொண்டு வர விரும்பவில்லை, ஆனால், உத்தரபிரதேசத்தில் எத்தனை வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன?

உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதை காத்திருந்து பார்த்துவிட்டு வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது. அரசாங்கத்திடம் மறைக்க எதுவும் இல்லை, அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வந்துள்ளது” என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  “18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் சில கட்சிகள் தங்களது தோல்வி அரசியலுக்காக நாடாளுமன்றத்தை தவறாகப் பயன்படுத்தின.” என்று மோடி கூறினார்.

ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு அளித்த வேண்டுகோளில், “முதல் முறை எம்.பி.க்களுக்கு விவாதத்தின் போது தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு கொடுங்கள்” என்று மோடி கூறினார்.

“முதல் அமர்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் குரலை ஒடுக்கவும், பிரதமரின் குரலை ஜனநாயக விரோதமான முறையில் நெரிக்கவும் முயற்சி நடந்தது.” என்று மோடி கூறினார்.


source https://tamil.indianexpress.com/india/opposition-targets-centre-over-neet-row-in-lok-sabha-rahul-gandhi-and-oppn-insists-will-education-minister-resign-6593614