புதன், 13 ஜனவரி, 2016

தாடி வைத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி ....

சீருடை அணியும் பணியில் இருக்கும் முஸ்லிம்கள் தாடி வைத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி ....
---------------------------------------------
அரசாங்கத்தின் சீருடை அணியும் பணியில் இருக்கும் முஸ்லிம்கள் தாடி வைப்பது குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளியாக
அஸ்ஸாம் ரைபிள் பிரிவில் பணியாற்றிய வீரரான ஹைதர் அலி என்பவரை மீண்டும் பணியமர்த்தவும் அவருக்கு கொடுக்கப்படவேண்டிய நிலுவைதொகைகளை கொடுக்குமாரும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டு பணியில் இருக்கும்போது தன் தாடியை சவரம் செய்ய மறுத்தார் என்ற காரணத்தால் ஹைதர் அலி பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஹைதர் அலி அரசியலமைப்பின் வழிபாட்டுக்கான உரிமையின் அடிப்படையில் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் “பணியில் இருப்பவர் தாடி வைக்க கூடாது என்பதற்கான எந்த சட்டமும் இல்லை.
நம் நாடு சட்டதிட்டங்களின் அடிப்படையில் ஆட்சி செய்யப்படுகின்றது மாறாக தனிப்பட்ட அதிகாரிகளின் விருப்ப வெறுப்பின் அடிப்படையில் இல்லை,
அது அவர் எவ்வளவு பெரிய உயர்பதவிகளை வகித்தாலும் சரியே” என்று கூறியுள்ளது
மறு பதிவு

Related Posts:

  • சூரிய விளக்கு ரூ.20 மதிப்புள்ள சூரிய விளக்கு செய்யும் முறை: முதலில் ஏ4 சீட் அளவில் புதிய அலுமினிய தகடு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 1 லிட்டர் அல்லது 2… Read More
  • ரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்தும் பேரீச்சை அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப… Read More
  • Be aware Read More
  • உளுந்து - மருத்துவப் பயன்கள்: நோயின் பாதிப்பு நீங்க: கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் … Read More
  • முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நிலையை தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நிலையை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது.... இந்தக் கருத்துச் சித்திரம்...சிந்திக்குமா சமுதாயம்..… Read More