நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேர விருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டு விட்டது'' என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளைய மிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் "அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமா'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்; தீமை பெருகி விட்டால்...'' என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர்: ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி),
நூல்: புகாரி 3346