வியாழன், 15 டிசம்பர், 2016

முஸ்லீம்கள் இந்துகளின் ஒரு பிரிவினரே என ஏற்றுக்கொண்டால் சச்சார் கமிஷனை எதிர்க்க மாட்டேன்

முஸ்லீம்கள் இந்துகளின் ஒரு பிரிவினரே என ஏற்றுக்கொண்டால்
சச்சார் கமிஷனை எதிர்க்க மாட்டேன்
RSS தலைவர் மோகன் பகத் திமீர் பேச்சு ...
யாரோ ஒருவர் கேட்டாராம் மோகன் பகத் ஜி நீங்க ஏன் முஸ்லீம்களின் இடஒதுக்கீடு கோரிக்கை முன் வைக்கும் சச்சார் கமிஷனை எதிர்க்கிறீர்கள் முஸ்லீம்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்களே நீங்க பஜனை செய்கிறீர்கள் , அவர்கள் ஃகவ்வாலி பாடுகிறார்கள் , நீங்க சிலை வணங்குகிறீர்கள் , அவர்கள் கஃபர் , சமாதி வணங்குகிறார்கள் இந்துகளாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும் இந்துகளின் கலாச்சாரத்தை பின் பற்றியே வாழ்கின்றனர் அப்படி பட்ட முஸ்லீம்களுக்கு கல்வி , வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுத்தால் என்ன குறை பகத் ஜி என சொன்னாராம் ...
மஹாராஜ் நீங்க சொல்வது போல் முஸ்லீம்கள் ஏற்றுக் கொண்டால் நாங்க சச்சார் கமிஷனை எதிர்க்க மாட்டோம் என்றாராம் ...
ஷஹீத் பழனிபாபா அவர்கள் சொன்னது மோகன் பகத் பேச்சில் உணர வேண்டி உள்ளது ...
பாபா சொல்லுவார்கள் இஸ்லாத்தை RSS கடுமையாக எதிர்க்க காரணம் இந்தியாவுக்கு வந்த புரட்சிகர கம்யூனிஸ்டுகள் உட்பட கிருஸ்த்துவம் , சீக்கியம் , புத்தம் வரையும் அனைத்து மதங்களிலும் புரட்சிகர அமைப்புகளிலும் பார்பணியம் ஊடுருவி RSS கட்டுப்பாட்டில் வைத்துவிட்டார்கள்...
இஸ்லாம் மட்டுமே இதுவரை RSS பார்பண கட்டுப்பாட்டில் போகவில்லை போகவும் முடியாது அதனால் தான் நம்மை கடுமையாக இந்த பார்பண பணியாக்கள் எதிர்கின்றார்கள் என பல மேடைகளில் தன்னுடைய மதிநுட்ப பேச்சால் கடுமையாக விமர்சித்துள்ளார் பாபா அவர்கள் ...
மோகன் பகத் ஜீ எந்த மஹாராஜ் உங்களிடம் சொன்னார் என பெயர் சொல்லவில்லையே ஏன் ?
நீங்களாக சொன்னா யாரும் மதிக்க மாட்டாங்க என மஹாராஜ் சொன்னதாக ஏன் புலுகு மூட்டைகளை உங்க மாணவர்கள் மத்தியில் விஷம் தடவிய வித்தாக விதைக்க வேண்டும் .
மற்ற மதங்கள் , புரட்சிகர அமைப்புகளை போல
இஸ்லாத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே RSS சாகா பயிற்ச்சியில் மோகன் பகத்தின் நயவஞ்சக பேச்சு ...
அன்புடன்
தடா ஜெ.அப்துல் ரஹிம் ..