புதன், 28 டிசம்பர், 2016

விமான நிலைய நுழைவுச் சீட்டு பெற ஆதார் அட்டை கட்டாயம்..!

விமான நிலையங்களில் நுழைவுச்சீட்டு பெறுவதற்கு ஆதார்டு அட்டை கட்டாயம் என அறிவிக்கபட்டுள்ளது.
நாட்டிலுள்ள அரசின் அனைத்து திட்டங்களையும் பெற ஆதார் அட்டை அவசியம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விமான நிலையங்களில் நுழைவுச் சீட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.