புதன், 28 டிசம்பர், 2016

'அதிமுக உடையாது; கரைந்துவிடும்': பத்திரிகையாளர் குருமூர்த்தி

Gurumoorthy

அதிமுகவுக்கு சசிகலா தலைமையேற்றால், அந்த கட்சி உடையாது; ஆனால் கரைந்துவிடும் என்று பத்திரிகையாளர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையின் பிரத்யேக நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்த கருத்தினைத் தெரிவித்தார். திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டபோது தொண்டர்கள் அவரது பக்கம் நின்றார்கள். அவரது மறைவுக்குப் பின் ஜெயலலிதா கிட்டத்தட்ட தனி ஒரு ஆளாக நின்று வென்றார். ஆனால், இன்றைய சூழலில் சரியான தலைமை இல்லாத நிலையில், அதிமுகவுக்கு தலைமையை உருவாக்குகிற இடத்தில் சசிகலா இருக்கிறார். அவர் கட்சியின் தலைமையை ஏற்காதபோது தொண்டர்களின் நம்பகத்தன்மையை அவர் பெறலாம் என்று பத்திரிகையாளர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை கூடுகிறது.