வியாழன், 29 டிசம்பர், 2016

செல்ஃபோன் டவர் பிரிவை ரூ.11,000 கோடிக்கு விற்கிறது ரிலையன்ஸ்

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனது செல்ஃபோன் கோபுர வணிக பிரிவை கனடா நாட்டு நிறுவனத்திற்கு விற்க உள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தை கனடாவின் ப்ரோக்ஃபீல்டு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துடன் ‌ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் செய்து கொண்டுள்ளது. விற்பனை மூலம் கிடைக்கும் 11 ஆயிரம் கோடி ரூபாயை தனது கடன்களை அடைக்க ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பயன்படுத்திக்கொள்ள உள்ளது. எனவே, செல்ஃபோன் கோபுர பிரிவு தனி நிறுவனமாக கனடா நாட்டு நிறுவனத்தால் நடத்தப்படும். இதில் சில உரிமைகள் மட்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.