புதன், 28 டிசம்பர், 2016

பழைய நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம்: அவசர சட்டம் வருகிறது

பண மதிப்பிழப்பு தொடர்பான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மார்ச் 31-ஆம் தேதிக்கு பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை 10-க்கும் மேல் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு அவசர சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கும்.
தற்போது பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அந்தப் பணத்தை வரும் 30-ஆம் தேதி வரை டெபாசிட் செய்து கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30-ஆம் தேதிக்கு பிறகு மார்ச் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கியில் கொடுத்து பழைய மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வரும் அவசர சட்டத்தின் படி மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் முழுமையாக செல்லாது. அந்த நோட்டுகளை 10-க்கும் மேல் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.