புதன், 14 டிசம்பர், 2016

இனி சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு...?!


சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகளை அடுத்த ஆண்டு முதல் பொது தேர்வாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வரை 10ம் வகுப்புக்கு பொதுதேர்வு நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் அது தடை செய்யப்பட்டது. இதனால் சி.பி.எஸ்.இ மாணவர்களின் கல்வியின் தரம் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பில் பொது தேர்வை ஏதிர்கொள்வதால் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் எழுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முடிவு இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சி.பி.எஸ்.இ. வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

Related Posts: