புதன், 12 ஜூலை, 2017

தனி மாநிலம் கோரி டார்ஜிலிங்கில் 27 வது நாளாக முழு அடைப்பு! July 12, 2017

தனி மாநிலம் கோரி டார்ஜிலிங்கில் 27 வது நாளாக முழு அடைப்பு!


கூர்க்காலந்து தனி மாநிலம் கோரி, மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் இன்று 27வது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

கூர்க்காலந்து தனி மாநிலம் உருவாக்க கோரி, மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கூர்க்கா ஜன்சக்தி மோர்ச்சா அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் இன்று 27வது நாளை எட்டியுள்ளது. 

முக்கிய வீதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அசாதாரணமான சூழல் நிலவுவதால், அமைதி வேண்டி அங்குள்ள கோயிலில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, நேற்று டார்ஜிலிங்கில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கோரிக்கை நிறைவேறும் வரை வரும் 15ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இப்போராட்டத்தில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒரு நபர் பங்கேற்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.  

Related Posts:

  • நம்பிக்கை இழந்துவிட்டோம்.....!!! நம்பிக்கை இழந்துவிட்டோம்.....!!! தமிழக அரசே....!! காவல் துறை மேலிடமே....!!! இஸ்லாமியர்களின் உயிர்கள் என்ன கில்லுக் கீரையா........ திட்டம் தீட்ட… Read More
  • முஸ்லிம் அமைப்புகளால் ஒன்றும் புடுங்க முடியாது.,,, தவ்ஹீத் ஜமாஅத், த .மு .மு .க போன்ற முஸ்லிம் அமைப்புகளால் ஒன்றும் புடுங்க முடியாது.,,, இந்து முன்னனி கட்சியின் தீவிரவாத வன்முறை பேச்சு ....... போலீ… Read More
  • சுடுதண்ணீரில் குளித்தால் ஆண்மை பாதிக்குமா? பல்வேறு காரணங்களினால் ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிப்பிற்குள்ளாகிறது. பெண்களுக்கும் கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலோனோர் … Read More
  • SHOW OUR HUMANITY பில் வாகன ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள்( ஜி.கோவிந்தராஜ்) மற்றும் சிலர்,பீச்சுக்கு வருகை தரும் வடமாநில வாலிபர்கள், காதலர்கள்,அனைவரையும் மிரட்ட… Read More
  • டில்லியில் விமானம் வெடித்தது டில்லி அடுத்த துவாரகா பகுதியில், எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான சிறியரக விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அதில் பயணம் செய்த 10 பேர் பலியாக… Read More