ஞாயிறு, 30 ஜூலை, 2017

திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் எந்த பிரச்னையும் இல்லை!” : திருமாவளவன் July 30, 2017

“திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் எந்த பிரச்னையும் இல்லை!” : திருமாவளவன்


திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இது பொதுவான அழைப்பு தான் எனவும், ஆனால், திமுகவுடன் இணைந்து செயல்படுத்துவதில் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் குறிப்பிட்டார். 

தற்போதுள்ள சூழலில், எந்த நேரத்திலும் ஏதும் நிகழலாம் என்ற நிலையில் தான், தமிழகம் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். திமுகவுடன் கூட்டணி குறித்து அப்போது முடிவு செய்வோம் எனவும், தற்போது மக்கள் பிரச்சனைகளில் திமுகவுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

நேர்மையான விவசாயிகளின் பிரச்னைகளில் கூட போராட விடாமல் காவல்துறை தடுப்பதாக  திருமாவளவன் குற்றம்சாட்டினார்.