சனி, 29 ஜூலை, 2017

போரூர் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்! July 29, 2017

போரூர் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்!


சென்னை பெருநகர காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து போரூர் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான போரூர் ஏரியின் கரைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால், காவல்துறையினர், தனியார் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள், ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

இதனை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், கடந்த 2 மாதங்களில் காவல்துறை சார்பில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருவதாக கூறிய அவர், போரூர் ஏரிக்கரையில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெறுவதாக தெரிவித்தார். போரூர் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Related Posts:

  • Jobs Senior Manager, E-Commerce Development-IT, Kuwait closing date - 27-Jul-2013 http://careers.alshaya.com/careers/alshaya/VacancyDetail.aspx?PageID… Read More
  • பர்மாவில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டால் "பர்மாவில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டால் "தலாய்லாமா"வை இந்தியாவை விட்டு வெளியேற்றும் போராட்டம் நடத்தப்படும் : TNTJ எச்சரிக்கை!பர்மாவில் முஸ்லீம்கள்… Read More
  • சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள் வீட்டில் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டிய 5 விஷயங்கள்:-பொதுவாக வீட்டில் தரை, பாத்திரங்கள், துணிகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்யும் பணி நடந்து … Read More
  • 1400 வாருடங்களிட்கு முன் Hujr ibn Adi!!1400 வாருடங்களிட்கு முன் "ஹஜர் பின் அதி" ரலியல்லாஹு அன்ஹு என்ற சஹாபியின் சியாரம் சிலநாட்களிட்கு முன் சிரியாவில் உள்ள வஹாபி சலபிகளி… Read More
  • C V எப்படி இருக்கணும் ரெஸ்யூம்? '' பணிக்கான உங்கள் தகுதி சரிபார்ப்பு, ரெஸ்யூமிலேயே ஆரம்பித்து விடுகிறது...'' என்கிறார் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் ஹெச… Read More