திங்கள், 31 ஜூலை, 2017

அட்டுழியம் தலைவிரித்தாடியது .

RSS , சங்பரிவார , குண்டர்கள் கும்பலின் அட்டுழியம் தலைவிரித்தாடியது .
காதலர்களை மடக்கி அவர்கள் எந்த சாதியினர் என்று விசாரித்தபின்னர் அவர்களை நிர்வாணபடுத்தி அவமானபடுத்தி அவர்களை சுடும் வெயிலில் காலில் செருப்பின்றி ஒருவரை மற்றொருவர் மாறிமாறி நிர்வாணமாக தூக்கிக்கொண்டு நடக்கவைத்து அவர்களை சித்ரவதை படுத்தும் காட்சி வைரலாக சமூகவலைதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இதை மொபைலில் வீடியோ எடுத்து பரப்பும் அளவுக்கு தைரியம் யார்கொடுத்தார்கள்?
கேவலம் சுதந்திரமான மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று கூறிக்கொண்டிருக்கும் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் இந்த நாட்டிலுள்ள மக்களின் குரூரத்தையும் வன்மத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகிறது. முக்கியமாக இது போன்ற இழிவான சம்பவங்கள் இந்து மத அமைப்புகள் விரவியுள்ள மற்றும் பாஜக ஆட்சியுடைய மாநிலங்களில்தான் பெரும்பான்மையாக நடைபெறுகின்றன.
இனவெறி பிடித்த மனிதமிருகங்கள் பசுக்காவலர்கள் என்ற பெயரில் இணைந்து இதுவரை பல மனிதர்களை வேட்டையாடிவிட்டது. அடுத்ததாக காதலர்களை குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் தொடங்கியுள்ளன.