திங்கள், 31 ஜூலை, 2017

மதத்தை பற்றி மீம் போட்டவரை அடுத்து உதைத்த நபர்! July 31, 2017


மதத்தை பற்றி மீம் போட்டவரை அடுத்து உதைத்த நபர்!


சமூக வலைதளத்தில் இந்து மதத்தை கேலி செய்யும் வகையில் மீம் போட்ட நபர் தாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

தீபக் ஷர்மா எனும் நபர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இந்து மதத்தை கேலி செய்யும் வகையில் மீம் போட்ட நபர் ஒருவரை தீபக் கடுமையாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இளைஞரை தாக்கும் போது, இனி யார் இந்து மதத்தை பற்றி மீம் போட்டாலும் அவர்களை தேடிவந்து அடிப்பேன் என தீபக் கூறும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தீபக்கின் பேஸ்புக் பக்கத்தில் வர் MBA படித்துள்ளதாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இதுபோன்ற பல வீடியோக்களையும் தீபக் ஷர்மா பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களின் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும், இல்லையென்றால் வழக்கு போடலாம்...அதைவிட்டு இப்படி காட்டுமிராண்டித்தனமாக தாக்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என இணையவாசிகள் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.