திங்கள், 31 ஜூலை, 2017

ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்குத் தலைக்கவசங்களை பரிசாக அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்..!! July 30, 2017

​ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்குத் தலைக்கவசங்களை பரிசாக அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்..!!


ஐதராபாத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பாதுகாப்புக்காகத் தலைக்கவசம் அணிந்து செல்வதன் தேவையை வலியுறுத்தும் விழிப்புணர்வு முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிதா கலந்துகொண்டு இலவசமாகத் தலைக்கவசங்களை வழங்கினார்.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து செல்வதன் தேவையை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிதா கலந்துகொண்டு, தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்குத் தலைக்கவசங்களைப் பரிசாக வழங்கினார். 

தலைக்கவசம் அணியாமல் சாலை விபத்தில் சிக்கி ஆண்டுதோறும் நாற்பதாயிரம் பேர் உயிரிழப்பதாகக் கவிதா கவலை தெரிவித்தார்.