
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில், மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபரின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டை வீசிச் சென்றனர். காவல்நிலையம் வாசலில் வீசப்பட்ட 3 குண்டுகளில் இரண்டு குண்டுகள் வெடித்தால் பதற்றம் ஏற்பட்டது. தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் முகப்பு பகுதியிலுள்ள 5 சிசிடிவி கேமிராக்களும் இயங்காததால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மண்ணெண்ணெய் குண்டு வீசியதாக சந்தேகப்படும் 2 பேரில், ஒருவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர் குறித்து தகவல் தெரிந்தால், 98402 23457 மற்றும் 97863 00555 ஆகிய செல்போன் எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டை வீசிச் சென்றனர். காவல்நிலையம் வாசலில் வீசப்பட்ட 3 குண்டுகளில் இரண்டு குண்டுகள் வெடித்தால் பதற்றம் ஏற்பட்டது. தேனாம்பேட்டை காவல்நிலையத்தின் முகப்பு பகுதியிலுள்ள 5 சிசிடிவி கேமிராக்களும் இயங்காததால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மண்ணெண்ணெய் குண்டு வீசியதாக சந்தேகப்படும் 2 பேரில், ஒருவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர் குறித்து தகவல் தெரிந்தால், 98402 23457 மற்றும் 97863 00555 ஆகிய செல்போன் எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.