வெள்ளி, 14 ஜூலை, 2017

சீனாவின் கோரிக்கையை நிராகரித்த இந்தியா! July 14, 2017




காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்து வைக்கத் தயார், என்ற சீனாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் Geng Shuang சமீபத்தில் கூறியிருந்தார். 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தை ஏற்க முடியாது என்றும், அது இருநாடுகள் இடையிலான பிரச்னை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் காஷ்மீர் விவகாரம் என்பது அந்த மாநில மக்கள் சம்பந்தப்பட்டது என்றும், இதில் எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாகவும் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இருநாடுகளின் பிரச்னை என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

மேலும், காஷ்மீரில் ரசாயன ஆயுதங்கள் எதையும் இந்தியா பயன்படுத்தவில்லை என்றும், இதுதொடர்பான பாகிஸ்தானின் புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

Related Posts: