வியாழன், 3 நவம்பர், 2022

சென்னையில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிக் கொலை…

 

சென்னையில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிக் கொலை… ஹெல்மெட் அணிந்த நபர்களுக்கு வலைவீச்சு
கொல்லப்பட்ட பிரியாணி கடை உரிமையாளர் நாகூர் கனி

சென்னையில் புதன்கிழமை (நவ.2) மாலை பிரியாணி கடை உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை அயனாவரத்தில் மார்க்கெட் பகுதியில் பிரியாணி கடை நடத்திவந்தவர் நாகூர் கனி. 33 வயதான இவர் நேற்று மாலை 7 மணியளவில் கடையில் நின்றிருந்தார்.

இந்த நிலையில் நாகூர் கனி மாலை கடையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது ஏற்கனவே அங்கிருந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் நாகூர் கனியை கொடூரமாகத் தாக்கினர்.
இதில் பலத்த காயமுற்ற நாகூர் கனி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து சென்னை அயனாவரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நாகூர் கனி முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவரின் கொலையில் ஈடுபட்ட ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் யார்? அருகில் உள்ள ஏதேனும் சிசிடிவி கேமராக்களில் இந்தக் கொலை பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்ற மர்மநபர்களையும், அவர்களின் பைக் எண்ணையும் போலீசார் தேடிவருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் பிரியாணி கடை உரிமையாளர் கொல்லப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts:

  • குடும்ப அட்டை குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும்… Read More
  • கொய்யா பழம் நம்மில் பலருக்கு சந்தையில் விலை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில்தான் அதிக சத்து உள்ளதாகவும், அதுதான் உடலுக்கு நல்லது என்பதுபோன்றும் ஒரு ப… Read More
  • India in 1835 Minute by the Hon'ble T. B. Macaulay, dated the 2nd February 1835.         [1] As it seems to be the opinion of s… Read More
  • ஊடகங்கள் மிரட்டப்பட்டுள்ளன. கருப்புப் பண சாமியார் பாபா ராம்தேவின் அடுத்த திருட்டுத்தனம் அம்பலம். இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட 'பதஞ்சலி பசு நெய்' என விளம்பரம் செய்து ஏமாற்ற… Read More
  • ஆச்சரியப்படும் உண்மைகள்: 1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம். 2. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான். 3. டைட்டானிக்… Read More