திங்கள், 11 ஜனவரி, 2016

முஸ்லிம் பெண் வெளியேற்றம்..!


சிரியாவிலிருந்து அகதிகளாக வந்த முஸ்லிம்களைத்
தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்
குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் பேசும்போது,
சிரியாவிலிருந்து வருபவர்கள் எல்லாம் ஐஎஸ்ஸுடன்
தொடர்பில் உள்ளவர்கள்தாம் என்று குறிப்பிட்டார்.
அவருடைய இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
கூட்டத்திலிருந்த ரோஸ் ஹாமித் எனும் பெண்
எழுந்துநின்று தம் கண்டனத்தைத் தெரிவித்தார்.
உடனே காவல்துறையினர் ரோஸ் ஹாமிதை
அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர்.
டொனால்ட் தம் கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று
மனித உரிமை ஆர்வலர்கள் இப்போது களத்தில் இறங்கியுள்ளனர்.

டொனால்ட் ஆதரவாளர்களில் ஒருவர்
ரோஸ் ஹாமிதைப் பார்த்து, “என்ன,
கையில் வெடிகுண்டு வைத்திருக்கிறாயா?”
என்றும் கேட்டாராம்..!
“முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைவதற்குத்
தடை விதிக்க வேண்டும்” என்று ஏற்கனவே
பேசியவர்தான் டொனால்டு டிரம்ப்.
அமெரிக்க ஊடகங்களில் இந்த நிகழ்வு
பரபரப்பான செய்தி ஆகியுள்ளது.
-சிராஜுல்ஹஸன்
Siraj Ul Hasan's photo.