வியாழன், 28 ஏப்ரல், 2016

வாத நோய்கள் வாத வலி வாத வீக்கம் குணமாக !!!


பழுத்த எருக்கன் இலைகள் ......... நான்கு
விளக்கெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் .. நூறு மில்லி
மிதமான சூட்டில் விளக்கெண்ணெயைக் கொதிக்க வைத்து அத்துடன்
வேப்ப எண்ணெயை சேர்த்துக் கொதிக்க வைத்து இரண்டும் ஒன்றாகக் கலந்த பின் பழுத்த எருக்கன் இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு சிறுதீயில் நன்கு வேகவிட்டு பொன்னிறமாக வந்தபின் தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி ஆறவைத்து சேமிக்கவும்
இந்த வாத எண்ணெயை வாத வலி வாத வீக்கம் உள்ள இடங்களில் தினமும் காலை மற்றும் இரவு போட்டு சூடு பறக்கத் தேய்த்து அரை மனி நேரம் கழித்து ஒத்தடம் கொடுக்க படிப்படியாக வாத நோய்கள் குணமாகும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்
தகவல் ;- பொன்.தங்கராஜ்