புதன், 27 ஏப்ரல், 2016

குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்!


அப்போ கட்டாயம்
இதைப் படியுங்கள்!..............
¨ குளிர்பானத்தில் வைட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை.
¨ வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும்.
¨ வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும்.
¨ உடல் பருமன் ஏற்படும்.
¨ செயற்கைக் கலர் (சிந்தடிக்) சேர்க்கப்படுவதால் உடல்நலம் கெடும்.
¨ சுவைக்குச் சேர்க்கப்படும் இரசாயனங்களால் கேடு.
¨ நார்ச்சத்து இல்லை.
¨ கொடுக்கும் காசுக்கு பயன் இல்லை கேடு அதிகம்.
குளிர்பானத்திற்குக் கொடுக்கும் காசுக்கு திராட்சை பழத்தை வாங்கி நன்றாக அலசி மென்று சாப்பிட்டால் எவ்வளவு பயன் தெரியுமா?
<<<<<< திராட்சையின் நன்மைகள் >>>>>>
¨ வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், தாது உப்புக்கள் கிடைக்கிறது.
¨ நார்ச்சத்து முழுமையாய் கிடைக்கும்.
¨ இதயம் வலுப்பெறும்
¨ மென்று சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள், தடைகள் வலுப்பெறும்.
¨ உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைக்கும்.
¨ உமிழ் நீர் அதிகம் கலப்பதால் உடல் நலம் பெருகும்.
¨ நோய் எதிர்ப்பாற்றல் வளரும்.
¨ எலும்புகள் வலுப்பெறும்.
‪#‎குறிப்பு‬: பழச்சாறு பருகுவதைவிட பழமாக மென்று சாப்பிடுவதே சிறந்தது. பழச்சாறு சாப்பிட்டால் அய்ஸ் சேர்க்க வேண்டாம். ஜீனி சேர்க்க வேண்டாம்.
அய்ஸ் அசுத்த நீரில் செய்கிறார்கள். அதிலுள்ள கிருமி அய்ஸ் மூலம் நமக்கு வந்து பல நோய்களை உண்டாக்கும்.
- மஞ்சை வசந்தன்