சோறு போடுயா மோடி – குமுறும் ராணுவ வீரர் – பரபரப்பு காணொளிப் பேச்சு
காஷ்மீரில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ள பி.எஸ்.எஃப். எனப்படும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ், தனது மனக் குமுறல்களை வீடியோவாக வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளதன் சுருக்கம். ” ஆட்சிதான் மாறி இருக்கிறது. ஆனால் காட்சி மாறவில்லை. கடுங் குளிரில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு காலை உணவாக பரோட்டாவும், டீயும் கொடுக்கப்படுகிறது.
பரோட்டாவிற்கு ஊறுகாயோ, காய்கறியோ இல்லை. இதனை சாப்பிட்டு விட்டு 11 மணி நேரம் கால் கடுக்க நிக்கிறோம். சில நேரம் மதிய உணவாக ரொட்டியும், பருப்பும், உப்பு, மஞ்சள் தூளும் கொடுக்கின்றனர்.
இது தான் நாங்கள் சாப்பிடும் உணவின் தரம். பல நாள் காலி வயிறுடன் தான் படுக்கைக்கு செல்கிறோம். இப்படி இருந்தால், ஒரு வீரன் எப்படி வேலை செய்ய முடியும். இதுபற்றி பிரதமர் விசாரிக்க வேண்டும். எங்கள் துயரத்தை யாரும் வெளிக்கொண்டுவரவில்லை.
இந்த வீடியோ வைரலானதற்கு பிறகு ஒரு வேளை நான் இங்கு இருக்க மாட்டேன். இவ்வாறு அந்த வீடியோவில் அந்த வீரர் பேசியுள்ளார்.
நாட்டுக்காக தனது உயிரையும் கொடுக்க துணிந்து போராடும் ராணுவ வீரர்களுக்கா இந்த நிலைமை.
காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பாஜக ரானுவ வீரர்களுக்கு வாங்கிய சவப்பெட்டியில் ஊழல் செய்தவர்கள், இப்ப ராணுவ சாப்பாட்டிலும் கை வைக்கிறார்கள்.