சனி, 7 ஜனவரி, 2017

மாவோயிஸ்டுகள் பயிற்சி எடுக்கும் வீடியோவில் தமிழர்கள்..!

Maoist l
கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வீடியோ காட்சிகளை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்களில் பலர் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கேரள போலீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் இளைஞர்கள் அதிகளவில் ஆயுதங்களுடன் பயிற்சி எடுத்துக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு வீடியோ காட்சியில் மலைப்பாம்பு ஒன்றின் தோலை மாவோயிஸ்டுகள் உரிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. உணவுக்காக மலைப்பாம்பை அவர்கள் கொன்று, அதிலிருந்து மாமிசத்தை எடுத்திருக்கலாம் என கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
பயிற்சி எடுத்த மாவோயிஸ்டுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் தமிழக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நிலம்பூர் வனப்பகுதியில் கடந்த நவம்பர் 24-ந்தேதி மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த குப்பு தேவராஜ், அஜிதா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென்டிரைவ், செல்போன், ஐபாட் உள்ளிட்ட பொருட்களில் இருந்து முக்கிய தகவல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.