வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டை தடை செய்த நீதிபதிக்கு பீட்டா அமைப்பு விருது ; “MAN OF THE YEAR” அளித்து கவுரவம்…

ஜல்லிக்கட்டை தடை செய்த நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ண பணிக்கருக்கு பீட்டா அமைப்பு விருது அளித்து கவுரவித்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக 2014-ம் ஆண்டு பீட்டா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் “எந்த ஒரு விளையாட்டிலோ, அல்லது ஜல்லிக்கட்டிலோ, அல்லது போட்டியிலோ காளைகளை பயன்படுத்த கூடாது. விலங்குகள் மதிக்கப்பட வேண்டும் “ என்று  பீட்டா இந்தியாவுக்கும் , இந்திய விலங்குகள் நல வாரியத்திற்கும் ஆதரவான முறையில் வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பை வெளியிட்ட, நீதிபதி கே.எஸ். பணிக்கர் ராதாகிருஷ்ணனுக்கு (ஓய்வு) 2014-ம் ஆண்டுக்கான “இந்தியாவின் சிறந்த மனிதன்” என்ற விருது பீட்டாவின் சார்பில்  வழங்கப்படுகிறது.
capture
உயிரினங்கள் மீதும் கருணை வேண்டும் என்று தீர்ப்பளித்த, நீதிபதிகள் பணிக்கர், பெர்னாண்டஸ் போன்றவர்கள் இந்த சமூகத்திற்கான  முன் மாதிரிகள். விலங்குகள் மீது அன்பு காட்ட வேண்டும் என்று அவர்கள் நமக்களித்த சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்று பீட்டா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பீட்டா அறிவிப்புhttp://www.petaindia.com/blog/peta-man-woman/
ஜல்லிக்கட்டு தீர்ப்பின் லிங்க்:http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=41513


Related Posts: