ஞாயிறு, 19 மார்ச், 2017

இந்தியாவில் பெப்சி, கோக் விற்பனை! தலைமை அதிகாரிக்கு 195 கோடி!

வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் குளிர்பான ஆலைகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது மதுரை உயர்நீதமன்றம். இதற்கு பின்னால் பெரிய மாஸ்டர் பிளானே நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, இந்தியாவுக்கான பெப்சி, கோக் நிறுவனத்தில தலைமை நிர்வாக அதிகாரியாக சென்னையை சேர்ந்த இந்திரா நூயி என்பவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் தாமிரபரணியில் பெப்சி, கோக் நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க கூடாது என்று தடை விதித்த போது, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் இந்திரா நூயி.
இதன் பின் வெளியான உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பில், தாமிரபரணியின் உபரி நீரை தான் எடுப்பதாகவும், அவர்கள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தீர்ப்பு வெளியானது.
இதற்கிடையே இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தாமிரபரணி தண்ணீரை விற்கும் பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா ரூ.195 கோடி.

Related Posts: