வெள்ளி, 31 மார்ச், 2017

சேலம் மாவட்ட வாலிபரின் 'வினோத' சாதனை March 31, 2017

சேலம் மாவட்ட வாலிபரின் 'வினோத' சாதனை


சேலம் மாவட்டத்தில் கராத்தே நடராஜ் என்பவர் மூக்கால் காரை தள்ளியும், ஒற்றை விரலால் காரை இழுத்தும் சாதனை செய்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது. 

சேலம் மாவட்டம் எளம்பிள்ளை பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாறு நடைபெறும் விழாவில் கராத்தே நடராஜ் என்பவர் கோவிலிலேயே ஆண்டுதோறும் பல்வேறு விதவிதமான சாதனைகளை செய்து காண்பித்து வருகிறார். 

இதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், அவர் மூக்கால் ஆம்னி காரை 10மீட்டர் தூரம் தள்ளியும், ஒரே விரலால் 10 மீட்டர் தூரம் காரை இழுத்தும் சாதனை படைத்து பார்வையாளர்களை அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கராத்தே நடராஜின் மாணவர்களும், சக பயிற்சியாளர்களும் பல்வேறு வகையான சாதனைகளை நிகழ்த்தி அசத்தினர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த சாதனையாளர் நடராஜ், உலக சாதனை புரிய வேண்டும் என்பதுதான் தன்னுடைய லட்சியம் என்றும், இதுபோல பல சாதனைகளை ஏற்கனவே  படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.