ஞாயிறு, 26 மார்ச், 2017

கலை கல்லூரியில் இருதரப்பு மாணவர்களிடையே நிகழ்ந்த மோதலில் மாணவருக்கு அரிவாள் வெட்டு!

25/3/2017, கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் இருதரப்பு  மாணவர்களிடையே நிகழ்ந்த மோதலில் மாணவருக்கு அரிவாள் வெட்டு நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணம் அரசினர் கலைகல்லூரியில் 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு  காலகட்டத்தில் பட்டபடிப்பு பயிலும் மாணவ மாணவியர்க்கு வேலை வாய்ப்பு பெரும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்த அரசு நிதி ஒதுக்கியது இந்த நிதியில் முறைக்கேடு நடந்துள்ளது என்றும், முறைக்கேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடந்த 22ம் தேதி கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்களில் ஒருவரான பிரகாஷ் என்ற மாணவர் நகரபேருந்தில் நேற்று பயணித்தபோது, அய்யாவாடி என்ற இடத்தில் ஏறிய 3 மாணவர்கள் பிரகாஷை அரிவாலாள் வெட்டியதில் காமுற்றார். 

இத்தாக்குதலில் காயமுற்ற மாணவர் பிரகாஷ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட சார்லஸ் விக்னேஷ் உள்ளிட்ட 3 மாணவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்