திங்கள், 27 மார்ச், 2017

திருச்சி மணப்பாறை அருகே 2 வயது ஆண் குழந்தை கடத்தல்

திருச்சி மணப்பாறை அருகே 2 வயது ஆண் குழந்தை கடத்தல்-  வீடியோ 
திருச்சி அருகே உள்ள  மணப்பாறையில் 2 வயதுக் குழந்தையைக் கடத்திச் சென்ற மர்ம  நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி அரபிக்குளம் சந்து தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவரின் 2 வயது குழந்தை சாய் தர்ஷன். கடந்த ஒரு வார காலமாக, குழந்தை சாய் தர்ஷன் மணப்பாறை அத்திக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனது தாத்தாவின் வீட்டில் தங்கியுள்ளான்.
நேற்று காலையில், குழந்தை சாய் தர்ஷன் தன் சகோதரி மற்றும் அக்கம்பக்கத்து சிறுவர்களுடன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், தர்ஷனை இருசக்கர வாகனத்தில் வந்து கடத்திச் சென்றான்.
அங்கு விளையாடிக்கொண்டிருந்த மற்ற சிறுவர்கள், வீட்டு பெரியவர்களிடம் இதனை தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், நடுப்பட்டி டோல் பிளாசாவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவல் நிலையங்களில், குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் தகவல் அளித்துள்ளனர்.
மேலும் கடத்தப்பட்ட குழந்தையை பார்த்தால் பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.