வெள்ளி, 31 மார்ச், 2017

தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில் சத்தமில்லாமல் நடக்கும் மொழிமாற்றம்

வேலூர் மாவட்டம் வழியாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையும், காட்பாடி வழியாக சித்தூர் செல்லும் நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது.
Hindi nh
இந்த நெடுஞ்சாலைகளின் ஒரமாக உள்ள மைல்கற்களில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் ஊர் பெயர்களை அழித்துவிட்டு, முதலில் இந்தியிலும், இரண்டாவதாக தமிழிலும் ஊர் பெயர்களை எழுதி வருகின்றனர். இதில் அனைவரும் படிக்கும் வண்ணம் இருந்த ஆங்கிலத்தை முற்றாக அழித்திடும் பணியையும் அமைதியாக செய்து வருகின்றனர். இதனால் இந்தி மற்றும் தமிழ் தெரியாத வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதாக புகார் எழுந்திருக்கிறது. ‌