சனி, 25 மார்ச், 2017

வரலாறு காணாத வகையில் வெப்பம் நீடிக்கும் – உலக வானிலை மையம் எச்சரிக்கை!

வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு கடும் வெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுவரையில்லாத அளவு கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கடல் பனிப்பாறை 40 லட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகியுள்ளது.
மேலும், 2017 ஆம் ஆண்டு வலுவான எல் நினோ விளைவு இல்லை என்ற போதிலும், உலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து புரிந்துக்கொள்ள வானிலை அமைப்புக்கு சவாலாக உள்ளது.
இது குறித்த ஆய்வை கூட செய்ய முடியாத நிலையில் உள்ளோம். விளைவுகளை கணிக்க முடியாத பிரதேசத்தில் இருக்கிறோம் என தட்பவெப்ப நிலை குறித்து உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அண்மையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் இந்த வருடம் 50 % அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய வானிலை மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டது.
எல்நினோ எனப்படும் காலநிலை மாற்றத்தால், கோடை காலத்தில் அதிகளவான வெப்ப தாக்கம் இருப்பதுடன், மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழியுமெனவும் கூறப்படுகிறது. அதனால் அளவு கடந்த வறட்சி, மழை வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts: