சனி, 25 மார்ச், 2017

தவறான சிகிச்சையால் குழந்தை பலியானதாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகை! March 24, 2017


திருவள்ளூரில் தவறான சிகிச்சையால் குழந்தை பலியானதாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் மணவாளநகரை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. விவசாயியான இவர் தனது மனைவி சரண்யா கர்ப்பமானதையடுத்து திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக பரிசோதனை செய்து வந்தனர். இந்நிலையில் பரிசோதனைக்கு வந்தவர்களிடம், இன்று சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக கூறி, சரண்யாவை மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் சுகப்பிரசவம் என்று தெரிவித்த மருத்துவர்கள் திடீரென அறுவை சிகிச்சை செய்யக்கோரி விநாயகமூர்த்தியிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை தொடங்கிய நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், 45 நிமிடம் காலதாமதமானதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அறுவை சிகிச்சையை தொடர்ந்து குழந்தை இறந்தே பிறந்ததாக மருத்துவர் கூறியதால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களை கலைந்துப்போக செய்தனர்.

Related Posts:

  • ‘சங்ககாலத் தமிழகம்’ கடல்கொண்டபின் எஞ்சிய ‘சங்ககாலத் தமிழகம்’ இதுதான். தமிழறிஞர்கள் முன்வைக்கும் பழந்தமிழக வரைபடம். வடவெல்லையாய்த் தற்போதைய ஆந்திரத்தின் வடபெ… Read More
  • Hadis ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்த… Read More
  • Quran பொய்ச் சத்தியம் செய்தல்.. இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப … Read More
  • Hadis: அற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள். இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்) கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபி… Read More
  • சேலத்தில் இந்தாண்டு மாம்பழம் விளைச்சல் குறைந்துள்ளது மாம்பழத்திற்கு பெயர் போன சேலத்தில் இந்தாண்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சந்தையில் மாம்பழங்களின் வரத்து இன்றி காணப்படுகிறது. இது மாம்பழ ப… Read More