தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றது. 10 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்ததை அடுத்து, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, மாணவர்களின் ‘ரேங்க்’ பட்டியலை வெளியிடாமல், சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அவர்களுடைய மதிப்பெண்ணை செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
அதன் அடிப்படையில்தான், கடந்த 12-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதைப் போலவே இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவும் வெளியிடப்பட இருக்கிறது.
தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 25ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டல் மேற்கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி மாலை வரை விண்ணணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றது. 10 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்ததை அடுத்து, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, மாணவர்களின் ‘ரேங்க்’ பட்டியலை வெளியிடாமல், சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அவர்களுடைய மதிப்பெண்ணை செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
அதன் அடிப்படையில்தான், கடந்த 12-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதைப் போலவே இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவும் வெளியிடப்பட இருக்கிறது.
தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 25ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டல் மேற்கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி மாலை வரை விண்ணணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறும்.