திங்கள், 29 மே, 2017

திட்டமிட்டபடி நாளை "மெடிக்கல் ஷாப்"-கள் கடையடைப்பு போராட்டம்! May 29, 2017

திட்டமிட்டபடி  நாளை


ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை கண்டித்து, திட்டமிட்டபடி  நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என  மருந்து வணிகர்கள் அறிவித்துள்ளனர். 

சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் செல்வன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுவதை கண்டித்து வரும் 30-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என  ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார்.  

ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததால் திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு நடத்தப்படும் என அவர் கூறினார். மத்திய அரசை கண்டித்து நடத்தப்படும் இந்த போராட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 30 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்படும் என செல்வன் அறிவித்துள்ளார். 

எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை முன்கூட்டியே வாங்கிக் வைத்து கொள்ளவேண்டும்  என  மருந்து  வணிகர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.