செவ்வாய், 30 மே, 2017

ஃபேஸ்புக் நட்பால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! May 30, 2017




பூனேவில் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து அவரை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2 வருசங்களுக்கு முன்பு பூனேவில் சாகர் கிருஷ்ணா என்பவருக்கு ஃபேஸ்புக் மூலம் இளம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவர்களுடைய நட்பு தினமும் தொடர்ந்துள்ளது. முதலில் சிறிது நாட்களுக்கு ஃபேஸ்புக்கில் உரையாடி வந்த இருவரும், சிறிது காலத்திற்கு பிறகு மொபைல் போனிலும் பேச ஆரம்பித்தனர். 

இவர்களின் நட்பு அதிகமாகவே அவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து பழகியுள்ளனர். இந்த சந்திப்புகளின் விளைவாக சாகர் கிருஷ்ணா அவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் அந்த பெண்ணை சந்திக்க கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி அவருடைய கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார், இதனால் அந்த பெண் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த பெண்னை கடத்திச் சென்ற சாகர் கிருஷ்ணா, அந்த பெண் தெளிந்த பிறகு அவரை மிரட்டி கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறிந்து பாதிக்கப்பட்ட பெண் போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் இளம் பெண் ஒருவர் தனது வாழ்க்கையையே இழந்துள்ள சம்பவம் பூனே பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் மூலம் இளம்பெண்கள் பலர் ஏமாற்றப்படுவது வாடிக்கையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.