செவ்வாய், 30 மே, 2017

ஹிட்லரின் வழியில் ஆர்எஸ்எஸ் நடைமுறைப்படுத்தும் கருத்தரித்தல் திட்டம் பேரா.த.அபுல்பாசல் 29 MAY 2017

இந்துத்துவ அமைப்புகள் மனிதகுல விரோதிகளான ஹிட்லர், முசோலினி போன்ற பாசிசத் தலைவர்களின் மீது வைத்திருந்த பற்றைப் பற்றி உலகம் அறியும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான மூஞ்சே, இத்தாலி நாட்டுக்குச் சென்று அங்கு முசோலினியை சந்தித்ததும், அவருடைய பாசிச சிந்தனைகளைப் பாராட்டியதற்கும் மூஞ்சேயின் நாட்குறிப்பே சான்று. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோல்வால்கர், ஹிட்லரின் ஆரிய தேசிய மேலாண்மையை ஆதரித்து தனது நூலில் எழுதிய கருத்துக்கள் உலகம் அறிந்ததே.

“தனது இன மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்க வைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப்பெருமையின் உச்சநிலையை நாம் இங்கே காணமுடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக் கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில் வாழும் நமக்குப்படிப்பினைபெறவும், பலனடையவும் நல்லபாடம் உள்ளது.”
என்று குருஜி எனஆர்எஸ்எஸ்காரர்ரகளால் போற்றப்படும் கோல்வால்கள் எழுதியுள்ளார்.

ஜெர்மனியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மருத்துவப் பிரிவான ஆரோக்ய பாரதி, சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள ‘பாரம்பரிய கருத்தரித்தல் அறிவியல் திட்டம்’ அமைந்துள்ளது. உலக பாசிசவாதிகளுக்கும் இந்திய பாசிஸ்டுகளுக்கும் இருக்கும் உறவு இன்றும் தொடர்வதுஅத்திட்டம்மூலமும்வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
குழந்தைகளின் குணாதிசயங்களை வடிவமைத்துக் கொள்ளலாமாம்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்கள் இந்தத் திட்டத்தைப் பற்றிக் கூறுகையில், கருத்தரித்தல் சம்பந்தமான பழங்கால இந்திய சாஸ்திரங்கள் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து பல தகவல்களைத் தொகுத்துள்ளதாகவும், இந்தப் பாரம்ரிய கருத்தரித்தல் முறையை பிரபலப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கருத்தரங்குகள் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் மூன்றாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சாஸ்திரங்கள் அடிப்படையில் கருத்தரித்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல்கூறுகளையும், குணாதிசயங்களையும் வடிவமைத்துக் கொள்ளலாம் என்று பிதற்றுகிறார்கள். பெற்றோர்கள் கருப்பு நிறமாக இருந்தாலும் பிள்ளைகளை உயரமாகவும் வடிவமைத்துக் கொள்ளலாமாம். மேலும் குழந்தைகள் அறிவுப்பூர்வமாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் இருக்குமாம். 
இதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஆலோசனை மையங்கள் வழங்கவும், உணவு ஆலோசனைகளைப் பின்பற்றவும் வேண்டும். முக்கியமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்காக உடலுறவை வானவியல் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் நிலையைக் கண்டறிந்து குறிப்பிட்ட நேரத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அத்தியாவசியமானதாம்.
இந்தப் பாரம்பரிய கருத்தரித்தல் முறை ஆலோசனை மையங்கள் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடந்த பத்து ஆண்டுகளாக செயல்படுவதாகவும், இதன்மூலம் இதுவரை 450 குழந்தைகள் பாரம்பரிய கருத்தரித்தல் முறையில் பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 2020ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் இந்த ஆலோசனை மையங்கள் திறக்கப்படும் என்றும், பல ஆயிரம் வடிவமைக்கப்பட்ட உன்னத குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் ஒரு வலிமையான பாரதம் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஹிட்லரின் திட்டம்
இந்தச் செய்திகள் ஜெர்மானிய ஹிட்லர் நடைமுறைப்படுத்திய லெபன்ஸ்பார்ன் என்ற திட்டத்தை நமக்கு நினைவுடுத்துவதில் ஆச்சரியமில்லை. ஹிட்லரின் இந்த திட்டத்தில் ஜெர்மானிய நாட்டை வல்லரசாக உருவாக்கிய தூய ஆரிய இனத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் இணைந்து ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டுமென்பதை இந்த திட்டம் 1944ம் ஆண்டு கைவிடப்பட்டபோது சுமார் 42 ஆயிரம் குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டன. 
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அசோக்குமார் வார்ஸ்னே, இந்தத் திட்டம் தங்கள் அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் ஜெர்மனிக்குச் சென்றிருந்த போது ஜெர்மானியர்களின் தாய் என்று வர்ணிக்கப்படும் பெண்மணியை சந்தித்ததாகவும் அந்தப் பெண்மணி இந்தியப் பாரம்பரிய கருத்தரித்தல் முறையைப் புகழ்ந்ததாகவும், ஜெர்மனி வல்லரசாக விளங்குவதற்கு அதுவே காரணம் என்று வர்ணித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த மூத்த தலைவர் யார் என்பதையும் அந்தப் பெண்மணி யார் என்றும் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்விப் பிரிவான வித்யபாரதி இந்தப் பாரம்பரிய கருத்தரித்தல் அறிவியல் மூன்று பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியப் பாரம்பரிய அறிவியல் ஞானம் சிறப்பானது என்று நாம் ஏற்றுக்கெள்வோம். ஆனால் அதற்காக இதை எந்த அறிவியல் பின்னணியும் இல்லாமல் மிகைப்படுத்துவது அபத்தமானது மற்றும் ஆபத்தானது. சமீபத்தில் கொல்கத்தா நீதிமன்றம் இந்த முறையின் அறிவியல் அடிப்படையில் கேள்வி கேட்டபோது பதில் அளிக்க முடியாமல் தவித்தனர்.
இந்தப் பாரம்பரிய முறை இந்தியாவின் அடிப்படை சட்டங்களுக்கு எதிரானது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 1954ம் ஆண்டு முதல் அமுலில் இருக்கும் மந்திர மருத்துவ முறைகள் தடைச் சட்டத்தை இந்தத் திட்டம் மீறுகின்றதாம். மேலும் இந்த முறையின் மூலமாக பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சொல்வது 1994ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாலின நிர்ணய தடைச் சட்டத்தை மீறுவதாக அமைகின்றதாம். ஜெர்மனியில் லெபன்ஸ்பார்ன் திட்டம் அமுல்படுத்தியதுதான் 60 லட்சம் யூதர்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தது. 60 லட்சம் யூதர்கள் கொலை செய்யப்பட்டது மட்டுமில்லாமல் 4,00,000ஜெர்மானியர்களுக்கு குறைந்த தரமான குழந்தைகளைப் பெறக்கூடியவர்களாக ஹிட்லர் கருதியதால் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது.
காந்தியைப் பெற்ற தேசம் ஹிட்லரின் பாதையில்...
இதுவரை 450 குழந்தைகள் பாரம்பரிய கருத்தரித்தல் முறையில் பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 2020ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் இந்த ஆலோசனை மையங்கள் திறக்கப்படும் என்றும், பல ஆயிரம் வடிவமைக்கப்பட்ட உன்னத குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் ஒரு வலிமையான பாரதம் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
makkalurimai.com/index.php/stories/20-india/656-rss-prescribing-fair-tall-customised-babies-is-dystopia-in-the-womb