செவ்வாய், 30 மே, 2017

மாட்டிறைச்சி விஷயத்தில் தமிழக அரசு மௌனத்தை கலைக்க வேண்டும் நாஞ்சில் சம்பத் கோரிக்கை! May 30, 2017

மாட்டிறைச்சி விஷயத்தில் தமிழக அரசு மௌனத்தை கலைக்க வேண்டும் நாஞ்சில் சம்பத் கோரிக்கை!


மாட்டிறைச்சி விஷயத்தில் தமிழக அரசு மௌனத்தை கலைக்க வேண்டும் என அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொது கூட்டத்தில் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். 

அக்கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்றும், அவர் விரைவில் திரும்பி வந்து அதிமுகவை வழிநடத்துவார் எனவும் தெரிவித்தார்.

மாட்டிறைச்சி விஷயத்தில் தமிழக அரசு மௌனத்தை கலைக்க வேண்டும் எனவும், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை போல் தங்கள் மாநிலத்திற்கும் பொருந்தாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு இப்படி சட்டம் கொண்டு வருவது இந்தியாவின் பன்முக தன்மையை சிதைப்பதாகவும் தெரிவித்தார்.