திங்கள், 29 மே, 2017

மத்திய பாஜக மோடி அரசின் மாட்டிறைச்சி தடை குறித்து கடும் கண்டனம் தெரிவித்த GOOGLE -CEO சுந்தர் பிச்சை!

கூகுளின் CEO, சுந்தர்பிச்சை அவர்கள் மாட்டிறைச்சி தடை சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தன்னை தன்மான தமிழன் என்று நிரூபித்திருக்கிறார். ஆளும் மத்திய அரசுக்கு செருப்படி பதில் கொடுத்திருக்கிறார்.


எனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. இந்தியாவின் வேலையின்மை குறித்தும் பல இலட்சக்கணக்கான இளைஞர்களின் வேலையிழப்பை குறித்தும் கவலையடைகிறேன். இந்திய அரசு மக்களின் நலனில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதைவிடுத்து உணவு பழக்க வழக்கங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். மாட்டிறைச்சி உண்பது அவரவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். இதை தடைசெய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது. அரசர்கள் நம் சுதந்திதத்தில் கைவைப்பதற்கு நாம் ஒன்றும் இருண்ட காலத்தில் வாழவில்லை! இந்தியா போன்ற தலைசிறந்த நாடுகள் மதரீதியான நடவடிக்கைகளை விடுத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நோக்கி நகர வேண்டும். மதத்தின் அடிப்படையில் செயல்பட்டால் அது இந்தியாவின் நிலைத்தன்மையைக் கெடுத்துவிடும். பெரும் தொழிற்சாலைகள் பல மதம் சார்ந்த பதற்றத்தின் காரணமாக இந்தியாவை விட்டு புலம் பெயர்ந்துவிட்டன. இந்தியாவின் எதிர்காலம் முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்களின் கையில் தான் இருக்கின்றது!
சுந்தர்பிச்சை,
முதன்மை செயல் அலுவலர்,
கூகுள்.
http://kaalaimalar.in/google-ceo-sundhar-pichai-condemns-fascist-bjp-modi/