செவ்வாய், 30 மே, 2017

வங்கக் கடலில் உருவான புயல் நாளை கரையைக் கடக்கிறது! May 30, 2017

வங்கக் கடலில் உருவான புயல் நாளை கரையைக் கடக்கிறது!



வங்கக் கடலில் உருவாகி உள்ள மோரா புயல், வங்கதேசத்தில் நாளை கரையைக் கடக்கும் என, சென்னை  வா னிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதன் இயக்குநர் பாலசந்திரன், வங்கக் கடலில் நிலவும் மோரா புயல், வடகிழக்குப் பகுதியில் நகர்ந்து, வங்கதேசத்தில் நாளை கரையை கடக்கும் எனக் கூறினார்.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை, நாளை தொடங்க, சாதகமான சூழல் உருவாகி உள்ளதாகவும், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.